×

சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆதாம்(21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபரும், சிறுமியும் வீட்டைவிட்டு வெளியேறி ராணிப்பேட்டையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதனால் நேற்று சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமடைந்துள்ளது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய ஆதாம் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Adam ,Dinakaran ,
× RELATED சிப்காட் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல்